கிளிநொச்சியில் இரண்டாவது தடுப்பூசி செலுத்த சென்ற முதியவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசி செலுத்துவதற்கு சென்ற 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் நூற்றுக்கணக்கானோர் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யூலை மாதம் 06 திகதியும் அதனை அண்டிய சில நாட்களும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாம் கட்ட சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் போது இரண்டாவது தடுப்பூசி இன்றைய தினத்திற்கு திகதி குறிப்பிட்டது.
இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட முதியவர்கள் தடுப்பூசி அட்டையில் குறிப்பிட்ட இன்றை தினம் தங்களுக்கான இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு இன்று காலை ஆறு மணிக்கு சென்று சுமார் ஒன்பது மணி வரை காத்துகொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவ தொடர்பில் அறிந்த இராணுவத்தினர் சம்பவ இடத்திற்குச்சென்று 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி எதிர்வரும் ஏழாம் திகதியின் பின்னர் கிடைக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் எனவே இது தொடர்பான அறிவித்தல் சுகாதார துறையினரால் அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் சமூகம் தருமாறும் தெரிவித்து பொது மக்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பிரிவு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வினவிய போது, இச்சம்பவம் தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் முதலாவது தடுப்பூசியினை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவத்தினரே செலுத்தினார்கள் எனவே, அவர்களே இவர்களுக்கான பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM