தெற்கு டெக்சாஸில் புதன்கிழமை சுமார் 30 பேருடன் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததுடன், ஏனையவர்கள் பலத்த காயமடைந்தனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெக்சாஸின் என்சினோ அருகே அதிவேக நெடுஞ்சாலை - 281 இல் புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக டெக்சாஸின் பொது பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வேனில் பயணித்த பயணிகள் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள் என்று ஆரம்ப கட்ட தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன.
வேன் எங்கு பதிவு செய்யப்பட்டது அல்லது யாருக்கு சொந்தமானது என்பது உட்பட எந்த தகவலும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
குறித்த வேனானது வேகக் கட்டுப்பாட்டினை இழந்து, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த உலோகப் பயன்பாட்டு கம்பத்தில் மோதுண்டே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் உறுதிபடுத்தப்பட்ட பின்னர், அவர்களது குடும்பங்களுக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM