(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.
நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வைரஸ் பரவல் பாரதூரமான நிலைமையை அடைந்தால் மாற்றுவழியாக முடக்கத்திற்கான தீர்மானங்கள் எடுக்கப்படக் கூடும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
நாட்டில் தற்போதுள்ள கொவிட் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது முடக்கங்கள் இன்றி பொருளாதாரம் சார் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எவ்வாறிருப்பினும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும் போது மாற்று வழியாக முடக்கம் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படக் கூடும்.
தொற்றாளர்களின் சடுதியான எண்ணிக்கை அதிகரிப்பினால் வைத்தியசாலைகளில் அவசரநிலை ஏற்பட்டால் , அதற்கான முன்னேற்பாடுகளும் தயார்படுத்தல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவைப் போன்று வாகனங்களிலிருந்து கொண்டு சிகிச்சை பெறும் நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுகாதார தரப்பிற்கு இதனை தனித்து கட்டுப்படுத்த முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM