(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்குவதற்கு தற்போது முடியாது. அவ்வாறு ஆசியர்களுக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் ஒட்டுமொத்த அரச துறையிலும் பாரிய சிக்கல் ஏற்படும். அதனால்தான் வரவு செலவு திட்டத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்திருக்கின்றோம்.
3 மாதங்களில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. என்றாலும் ஆசிரியர்கள் 3 மாதங்களுக்கு பொறுத்திருக்க முடியாது இன்று மாணவர்களது கல்வியை பணயமாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் கொவிட் தொடர்பான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே அதிபர் ஆசிரியர்களை பாடசாலைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றோம் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதாசவினால் கேட்கப்பட்ட அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, கொவிட் வேகமாக பரவும் அபாயம் இருக்கும் நிலையில் அவர்களை பாடசாலைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொழும்பு மாவட்டத்தில் 98 வீதமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மாதம் இறுதியாகும்போது ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் வழங்கி பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
மேலும் இணையவழி கற்பித்தலை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு சிறந்த இடம் பாடசாலைகளாகும். அதனால்தான் அதிபர், ஆசிரியர்களை பாடசாலைக்கு வருமாறு அறிவிப்பு செய்தோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM