தென் கொரியா நாட்டில் இரண்டு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
கொரோனா வைரஸில் டெல்டா வைரஸ் மரபணு மாற்றத்தால் உருவான டெல்டா பிளஸ் வைரஸ் தென்கொரியாவில் இனங்காணப்பட்டது இதுவே முதல் முறை என அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்டா பிளஸ் தொற்றாளர்களில் 40 வயதுடைய நபர் ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது.
தென் கொரியா இதுவரை புதிய கொரோனா வைரஸின் நான்கு முக்கிய வகைகளில் 6,016 தொற்றாளர்களை உறுதி செய்துள்ளது. இதில் 2,983 பேர் டெல்டா வைரஸ் தொற்றாளர்களாவர்.
செவ்வாய்க்கிழமை அன்று தென் கொரியாவில் 39 சதவிகிதம் பேருக்கு முதலாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை 14.1% பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தென் கொரியா செப்டம்பர் மாதத்திற்குள் குறைந்தது 36 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM