அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் முதல் முதலாக 60 வயதுடைய ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (03) உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வி. மோகனகாந்தன் தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலயத்தில் பிரதேசத்தில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து பிரதேசத்தில் 1526 தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதுடன் தொடர்ந்து 200 பேர் கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில்; திருக்கோவில் பிரதேச சுகாதார அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றினால் இதுவரை ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இருந்தபோதும் இன்று கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்தார். எனவே தடுப்பூசி மூலம் தாக்கத்தை குறைக்கலாமே தவிர நோய் தொற்று ஏற்படுவதனை தவிர்க்கமுடியாது.
எனவே நாங்கள் தடுப்பூசி ஏற்றிவிட்டோம் என இறுமாப்புடன் தேவையற்ற விதத்தில் தேவையற்ற ஒன்று கூடல் மற்றும் வீதியில் நடமாடுதல் களியாட்டங்கள் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதை தவிர்த்து தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமான முறையில் கடைப்பிடித்து எமது பிரதேசத்தை மீண்டு வழமையான நிலைமைக்கு கொண்டுவர ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM