(எம்.மனோசித்ரா)
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் சகல தரப்பினராலும் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கும் அரசாங்கம் முக்கியத்துவமளிக்கும். அதற்கமைய இலங்கையின் சுதந்திர கல்விக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், திங்களன்று நடைபெற்ற பாராளுமன்ற குழு கூட்டத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டு கொத்தாவல பாதுகாப்பு கல்லூரி பல்கலைக்கழகமாக்கப்பட்டது.
அதன் பின்னர் உருவாக்கப்பட்ட சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய விடயங்கள் உள்ளிட்ட அதனை சமர்பிப்பதே இதன் இலக்காகும். இது தொடர்பில் முன்வைக்கப்படும் சகல கருத்துக்கள் தொடர்பிலும் ஜனநாயக ரீதியிலான அரசாங்கம் என்ற ரீதியில் கவனம் செலுத்தப்படும்.
அவற்றை கவனத்தில் கொண்டு செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் காணப்படுமாயின் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பதோடு அவை இலங்கையின் சுதந்திர கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் செய்யப்படும் என்பதை அரசாங்கம் என்ற ரீதியில் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM