(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கு சிக்கலுடையது என்பதால் ஏதேனுமொரு இடத்தில் தவறிழைக்கப்பட்டாலும் , சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பிவிடக்கூடும். எனவே இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளதால் சிறிது காலம் செல்லும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பேராயரால் உயிரித்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை. எனினும் இவ்விடயம் தொடர்பிலான உள்ளக விடயங்கள் பல குறித்து பேசப்பட்டது.
இதன் போது சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சு உள்ளிட்ட இந்த விவகாரம் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிறுவனங்கள் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி சுயாதீனமாக செயற்பட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் பிரதானமாக பேசப்பட்டது.
எனினும் இந்த வழக்கு மிகவும் சிக்கலானது என்பதால் , ஏதேனும் ஒரு இடத்தில் தவறிழைக்கப்பட்டாலும் , சம்பவத்துடன் தொடர்புடையோர் தப்பிவிடக் கூடும் என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளதால் சிறிது காலம் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM