மத்திய சீனாவில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது.
இந்த அறிவிப்பானது கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதுடன், டஜன் கணக்கான மக்கள் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹெனான் மாகாணத்தின் தலைநகரான ஜெங்ஜோயில் 292 பேர் உயிரிழந்துள்ளதுடன், 47 பேர் காணாமல்போயுள்ளனர். மாகாணத்தின் ஏனைய பகுதிகளில் மூன்று பேர் காணாமல்போயுள்ளனர்.
12 மில்லியன் மக்கள் வசிக்கும் ஜெங்ஜோ, ஒரு வருடத்திற்கான மழையினை வெறும் மூன்றே நாட்களில் பதிவுசெய்தது. ஜூலை 17 முதல் மூன்று நாட்களில் சுமார் 617.1 மில்லி மீட்டர் (24.3 அங்குலம்) மழை ஜெங்ஜோவில் பதிவானது. இது நகரின் ஆண்டு மழைவீச்சு சராசரி 640.8 மி.மீ (25.2 அங்குலம்) க்கு சமம்.
இதனால் குடியிருப்பு பகுதிகளும், வாகனங்களும், வீதிகளும் மற்றும் சுரங்க ரயில் பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கின.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM