அரச உத்தியோகத்தர்களை பழிவாங்குவதற்காகவா அரசாங்கம் பணிக்கு அழைத்துள்ளது? - ஜே.சி.அலவத்துவல

Published By: Digital Desk 3

03 Aug, 2021 | 10:35 AM
image

(எம்.மனோசித்ரா)

அரச உத்தியோகத்தர்களை பழிவாங்குவதற்காகவா அரசாங்கம் சகலரையும் பணிக்கு அழைத்துள்ளது. கொவிட் பரவலில் அபாயமுடைய நாடுகள் பட்டியலில் தற்போது இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் கர்ப்பிணிகள் உள்ளிட்ட சகல அரச உத்தியோகத்தர்களையும் பணிக்கு அழைத்திருப்பது பொறுத்தமற்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மக்களுக்கு பாதுகாப்பனவையா? கொவிட் பரவலில் அபாயமுடைய நாடுகள் பட்டியலில் தற்போது இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளை பின்பற்றாமல் ட்ரம்ப் செயற்பட்டமையின் காரணமாகவே அமெரிக்காவில் 5 இலட்சம் மக்கள் உயிரிழக்கக் காரணமாகும். இதே போன்று தான் பிரேசிலிலும் நடைபெற்றது. அதே நிலைமையே இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது.

இந்த அரசாங்கத்தினால் உரிய நேரத்தில் உரிய தீர்மானம் எடுக்கப்படுவதில்லை. நாளொன்றுக்கு 60 மரணங்களும் 2000 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அரச உத்தியோகத்தர்கள் சகலரும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டாலும் தடுப்பூசியைப் பெற்று சுமார் 4 வாரங்களின் பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்று தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டில் பெருமளவானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி இன்னும் வழங்கப்படவில்லை. சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதா? நாட்டில் தற்போதுள்ள நிலையில் கர்பிணிகளும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளமை பாதுகாப்பானதல்ல. 

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் அரச உத்தியோகத்தர்களை பழிவாங்குவதற்காகவா முன்னெடுக்கப்படுகிறது? அரச உத்தியோகத்தர்களில் 60 வீதமானோர் தற்போதைய அரசாங்கத்திற்கே வாக்களித்துள்ளனர். எனவே அவர்களை பழிவாங்கும் வகையிலான செயற்பாடுகள் பொறுத்தமற்றவை.

தடுப்பூசி வழங்குவதால் மாத்திரம் அபாய நிலைமையை கட்டுப்படுத்த முடியாது. உண்மையில் தற்போது அரசாங்கத்தின் தேவை தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதா அல்லது மேலும் அதிகரிப்பதா? இந்த சந்தர்ப்பத்திலாவது அரசாங்கம் சரியான நேரத்தில் உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08