உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு..!

Published By: J.G.Stephan

02 Aug, 2021 | 11:31 AM
image

கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக, உலகளாவிய ரீதியில் மக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி, இலங்கை சாதனையை படைத்துள்ளதாகவே அவர் பாராட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் கொரோனாவிற்கு எதிராக கடந்த வியாழக்கிழமை 5,15, 830 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இந்த மைல்கல்லை எட்டிய சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கத்திற்கு உலக சுகாதார அமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, தொடர்ந்து பொதுமக்களும், அரசாங்கமும் கொரோனா குறித்த  சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொரோனாவிற்கெதிராக போராட வேண்டுமெனவும், அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 

இலங்கையில், கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டோரின் விபரங்களை சேகரித்துகப்பார்க்கையில், கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியுள்ளது.

இலங்கையில் இதுவரையில், 10,076,981 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதுடன், மொத்த சனத்தொகையில், 30 வயதிற்கு மேற்பட்டோரில், 86% இற்கும் அதிகமானோர், குறைந்த பட்சம், முதலாம் கட்ட தடுப்பூசியையேனும் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், 30 வயதிற்கு மேற்பட்டோரில், 20% மானோர், 2ஆம் கட்ட தடுப்பூசியையும் பெற்றுள்ளதாகவும் சேகரிக்கப்பட்ட தரவுகளின் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அதாவது இலங்கையில் சுமார், 2.2 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27