பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்தில் கடந்த 2010 முதல் வீட்டுப் பணியாளர்களாக பணியாற்றிய 11 பெண்களில் மூன்று பேர் உயிரிழந்து விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் அவரது வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட 16 வயதுடைய சிறுமி தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணைகளைத் தொடர்ந்து 16 வயது சிறுமி உட்பட மொத்தம் 11 பெண்கள் 2010 - 2021 க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் ரிஷாத்தின் இல்லத்தில் பணியாளர்களாக தொழில்புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
16 வயதுடைய சிறுமியை ரிஷாத்தின் இல்லத்திற்கு பணியாளராக அழைத்து வந்த அதே தரகரே ஏனைய பெண்களை, அவரது இல்லத்திற்கு அழைத்து வருவதில் முக்கிய பங்கு வகித்ததாக பொலிஸார் முன்னர் கூறியிருந்தனர்.
பதின்ம வயது சிறுமியைத் தவிர, முன்னர் அங்கு பணிபுரிந்த மற்றொரு பெண் உடல்நலக்குறைவு (புற்றுநோய்) காரணமாக இறந்துவிட்டதாக அறியப்படுகிறது. அதே நேரத்தில் மற்றொரு பெண் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நேற்று எட்டு பெண்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதான பெண் ஒருவர், எம்.பி.யின் இல்லத்தில் பணிபுரியும் போது பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
16 வயது சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் ரிஷாத்தின் மனைவி, மாமனார் மற்றம் தரகர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் முன்னாள் அமைச்சரின் 44 வயது மைத்துனரும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM