(க.கமலநாதன்)
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு வடக்கிலிருந்தே 80 வீதமான அச்சுறுத்தல் செயற்பாடுகள் வந்துள்ளன. எனவே வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினை நிலைக்கொள்ளச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தூய்மையான ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய நடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விஜயத்தின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் நடமாட்டத்தினை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மூன்று மாதங்களுக்குள் அந்த செயற்பாட்டினை விரைந்து முன்னெடுப்பதாக வாக்களித்துள்ளார்.
ஆனால் தெற்கில் இனவாதிகளினால் இராணுவத்தை அகற்கும் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படக்கூடும், அதனால் படிப்படியா அந்தச் செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் குறிபிட்டுள்ளார்.
மேலும் இலங்கைக்கு வடக்கு பகுதியிலிருந்தே 80 வீதமான எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. எனவே வடக்கில் இராணுவம் நிலைகொள்ள வேண்டியது மிக அவசியமானது. அத்துடன் வடக்கில் மக்கள் தொகையும் குறைவாக உள்ளதால் இராணுவ முகாம்கள் அமைக்க வடக்கே பொருத்தமான பகுதியாக அமையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM