(இராஜதுரை ஹஷான்)
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படும். குறுகிய அரசியல் நோக்கங்களைணஅடிப்படையாகக் கொண்டு இச்சட்டமூலம் தொடர்பில் எதிர் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஒவ்வொரு வருடமும் சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். இவர்களில் 30 ஆயிரம் - 35 ஆயிரம் வரையிலான மாணவர்களுக்கு மாத்திரமே பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகிறது.
வசதி உள்ள மாணவர்கள் அதிக பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்கு சென்று பட்டப்படிப்பை மேற்கொள்கிறார்கள். ஏனைய மாணவர்களுக்கு பட்டப்படிப்பு என்பது வெறும் கனவாக அமைந்து விடுகிறது. இவ்வாறான நிலையில் இலவச கல்வி முழுமையடையவில்லை என்றே கருத வேண்டும்.
உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி வழங்கல் என்பது சுபீட்சமான கொள்கையாக காணப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழக கல்லூரிகளை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM