ஹரிகரன்
"சீனாவின் சர்வதேச நலன்களை உறுதி செய்வதில், சீனாவுக்காக வரிந்து கட்டிக்கொள்வதில், இலங்கை உறுதியாக உள்ளது"
சீனப் பிரதமர் லீ கெகியாங் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், செப்டெம்பர் 10ஆம் திகதி அவர் இரண்டு நாட்கள் பயணமாக கொழும்பு வரவிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சீனப் பிரதமரின் இந்தப் பயணம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று அல்ல. சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன் பயணம் தான் எதிர்பார்க்கப்பட்டது.
அவர் கடந்த ஜூன் மாதம் கொழும்பு வருவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக அந்தப் பயணம் பிற்போடப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே சீனப் பிரதமர் லீ கெகியாங் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
செப் டெம்பர் 30 ஆம் திகதிக்குள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு விடும் என்றும், அதன் பின்னர் நாடு முழுமையாக திறக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறுகின்ற நிலையில் தான் சீனப் பிரதமரின் இந்தப் பயணத் திட்டமும் வெளியே கசிந்திருக்கிறது.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சீனாவுடனான நெருக்கமும், ஒத்துழைப்பும் அதிகரித்திருக்கிறது.
இது தொடர்பான கவலைகளும், கரிசனைகளும் சர்வதேச அளவில் தீவிரமடைந்துள்ள நிலையில் சீனப் பிரதமரின் இந்தப் பயணம் இன்னும் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஏனென்றால், கடந்த 10 மாதங்களுக்குள் சீனாவின் இரண்டு உயர்மட்டப் பிரதிநிதிகள் கொழும்புக்கு அடுத்தடுத்துப் பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.
ஒருவர் முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் பணியக உறுப்பினருமான யாங் ஜீச்சி அவரது பயணத்துக்குப் பின்னர் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ பெங்கியின் பயணம் இடம்பெற்றிருந்தது.
இந்தப் பயணங்களின்போது எட்டப்பட்ட பல இணக்கப்பாடுகளும், கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகளும் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை.
இலங்கையுடன் சீனா பாதுகாப்பு ரீதியான நெருக்கத்தைக் கொண்டிருந்தாலும், அதனை வெளிப்படுத்துவதைக் காட்டிலும், பொருளாதார ரீதியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-01#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM