துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் காட்டுத்தீயால் அழிந்த தெற்கு துருக்கியின் சில பகுதிகளை "பேரிடர் பகுதிகள்" என்று அறிவித்துள்ளார்.
தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்த பின்னர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது.
துருக்கியில் புதன்கிழமை முதல் ஏற்பட்ட தீ, கிராமங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை ஆக்கிரமித்து மக்களை வெறியேற்றுவதற்கும் கட்டாயப்படுத்தியுள்ளது.
இதனால் மனாவ்காட்டில் குறைந்தது ஐந்து பேரும் மர்மாரிஸில் ஒருவரும் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனவ்காட்டில் ஏற்பட்ட தீவிபத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 400 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இன்னும் 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா கூறினார்.
மர்மாரிஸில் தீவிபத்தால் பாதிக்கப்பட் 159 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந் நிலையில் துக்கிய ஜனாதிபதி எர்டோகன் சனிக்கிழமை ஹெலிகொப்டர் மூலமாக தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
எர்டோகன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை "பேரிடர் பகுதிகள்" என்று டுவிட்டரில் தெரிவித்ததுடன், "எங்கள் தேசத்தின் காயங்களை ஆற்றவும், அதன் இழப்புகளை ஈடுசெய்யவும், அதன் வாய்ப்புகளை மேம்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்" என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM