களுத்துறை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் பண்டாரகம பிரதேசத்தில் 40 கிலோ கிராமிற்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெருமதி 40 கோடி ரூபாவாகும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
களுத்துறை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போதே ஹெரோயின் தொகையுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது , இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலுள்ள போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர் இதனுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுடன் இணைந்து களுத்துறை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் இது தொடர்பான மேலதிக விசாணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM