பிரபல றக்பி வீரரான வஸீம் தாஜுதீனின் மர்ம மரணம் தொடர்பில் தற்போது யாழ். பிரதேச இராணுவ முகாம் ஒன்றில் சேவையாற்றுவதாக கூறப்படும் கெப்டன் திஸ்ஸ அல்லது மேஜர் திஸ்ஸ என அழைக்கப்படும் எலஹர, தெஹிவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரரிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு தயாராகிவருவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2012 மே 17 ஆம் திகதி அதிகாலை வேளையில் வஸீம் தாஜுதீன் பயணித்த அவரது கார் நாரஹேன்பிட்டி சலிகா மைதானப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த போது அதனை அணைக்க முற்பட்டவர்கள் வழங்கியுள்ள வாக்குமூலங்கள் கிருலப்பனையில் கைப்பற்றப்பட்ட சீ.சீ.ரி.வி.காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அவரிடம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.
வஸீம் தாஜுதீனின் கார் எரியும் போது அவ்விடத்துக்கு வந்த நபர் ஒருவர் அதனை அணைக்க காரை நோக்கி செல்லும் போது, அருகே போக வேண்டாம் என திஸ்ஸவை ஒத்த உருவமைப்பைக் கொண்ட நபர் ஒருவர் தெரிவித்ததாக பொலிஸாரினால் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு மூலம் மற்றும் அந்த இடத்தில் இரு டிபண்டர் ரக வாகனங்கள் இருந்ததாகவும் அவை சிறிது நேரத்தில் மின்னல் வேகத்தில் மறைந்ததாகவும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் கிருலப்பனை சந்தியில் இருந்து பெறப்பட்டுள்ள சீ.சீ.ரி.வி.காட்சிகளில் பல வாகனக்கள் வஸீம் தாஜுதீனின் வாகனத்தை துரத்தும் நடவடிக்கை பதிவாகியுள்ளது.
வஸீம் தாஜுதீன் அந்த வாகனங்களிடமிருந்து தப்பி செல்ல முயற்சிக்கும் காட்சிகளும் அதனை தடுக்கும் காட்சிகளும் இவ்வாறு பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இந்த காட்சிகள் அடங்கிய இறுவட்டு தற்சமயம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் தொடர்பாடல் பிரிவினரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பொலிஸ் தலைமையக உயர் அதிகாரி ஒருவர், அதன் அறிக்கை சில நாட்களுக்குள் கிடைக்கப் பெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி அனைத்து பல்கலை மாணவர் ஒன்றியம் நடத்திய பேரணியொன்றின் போது, மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்ததாக கூறப்படும் ஜனக
பண்டார மற்றும் சிசித்த பிரியங்கர ஆகிய மாணவர்களின் மரணமும் கொலையெனவும் அதனுடனும் திஸ்ஸவுக்கு தொடர்பிருப்பதாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் அது தொடர்பில் இன்னும் போதிய சாட்சியங்கள் இல்லை என தெரிவிக்கப்படும் நிலையில் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவை நகர மண்டப பகுதியில் உள்ள பிரபல ஆடையகம் அருகே தாக்கியமை உள்ளிட்ட சம்ப்வங்களுடனும் திஸ்ஸவே தொடர்புபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக நெருங்கியவராக இருந்ததாக கூறப்படும் குறித்த இராணுவ வீரர் அப்போது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இருந்துள்ளதாகவும் அவரை விசாரணைக்கு உட்படுத்தும் பட்சத்தில் மேலும் பல தகவல்களை வெளிப்படுத்த முடியுமாக இருக்கும் எனவும் புலனாய்வுப் பிரிவு நம்புவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் சுட்டிக்காட்டின.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM