( இராஜதுரை ஹஷான்)
ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினை மற்றும் ஆசிரியர்- அதிபர் சேவையை கட்டாய சேவையாக்குதல் ஆகிய கோரிக்கைகளுக்கான இறுதி தீர்வை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆசிரிய- அதிபர் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் வாக்குறுதி வழங்கினார்.
பிரதமருக்கும், ஆசிரிய அதிபர் தொழிற்சங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம் பெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆசிரியர்- அதிபர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.
இதற்கமைய திங்கட்கிழமை முதல் அனைவரும் சேவையில் ஈடுப்பட தயாராக வேண்டும். என பிரதமர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டார்.
ஆசிரியர்- அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு மற்றும் ஆசிரியர்- அதிபர் சேவையினை கட்டாய சேவையாக்கும் கோரிக்கை ஆகியவற்றிற்கு எதிர்வரும் திங்கட்கிழமை இடம் பெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்த இறுதி தீர்வு வழங்கப்படும்.எனவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM