(இராஜதுரை ஹஷான்)
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்னாசிய வலய நாடுகள் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது.
இந்நாடுகள் தொடர்ந்து இலங்கையுடன் நட்புறவுடனும், ஒத்துழைப்புடனும் அனைத்து துறைகளிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மத்திய கிழக்கு மற்றும் தென்னாசிய வலய நாடுகளின் தூதுவர்களிடமும், உயர்ஸ்தானிகர்களிடமும் வலியுறுத்தினார்.
பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் சவூதி அரேபியா, எகிப்து, குவைட் ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நிதியமைச்சில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் பங்களாதேஷ் நாட்டின் உயர்ஸ்தானிகர் தாரிக் ஆரிபுல் இஸ்லாம், பாக்கிஸ்தான் நாட்டுக்கான பதில் உயர்ஸ்தானிகர் தனவீர் அஹ்மட், சவூதி அரேபியாவின் தூதுவர் அப்துல் நஸீர் அல்- ஹர்தி, மற்றும் குவைட் தூதுவர் கபால் பு ஹெயர, எகிப்து தூதுவர் ஹூசைன் எல் சஹர்தி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும், தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்குமிடையில் நட்புறவான பேச்சுவார்த்தை இடம் பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM