(எம்.மனோசித்ரா)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 36 வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை கொழும்பிற்கு அழைத்து வந்த தரகர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களை இன்று திங்கட்கிழமை காலை வரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையடுத்து இன்று காலை குறித்த சந்தேகநபர்கள் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM