(எம்.மனோசித்ரா)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் இது வரையில் சுமார் 30 வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் மனைவி உள்ளிட்ட அனைத்து சந்தேகநபர்களும் நாளை திங்கட்கிழமை மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் தொடர்ந்தும் அவர்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தவிர இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் சுமார் 30 வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தரகரான சிறுமியை முன்னாள் அமைச்சரின் இல்லத்திற்கு அழைத்து வந்த பண்டாரம் என்படும் சங்கர் என்ற நபரின் வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்த பணிபுரிந்த பிரிதொரு பெண்ணிடம் பெற்றப்பட்ட வாக்குமூலத்தில், குறித்த பெண் 2015 - 2019 க்கு இடைப்பட்ட காலத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM