இராணுவம் குற்றமிழைத்திருந்தால் உண்மையை கண்டறிவதில் தவறில்லை

Published By: Raam

05 Sep, 2016 | 06:06 PM
image

(ப.பன்னீர்செல்வம்) 

இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள  முயற்சிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர்  மங்கள  சமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அடிப்படைவாதிகளை ஊடுறுவச் செய்தவர் மஹிந்த ராஜபக்ஷவே என்றும்  சுட்டிகாட்டியுள்ளார். 

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள  சமரவீர  மேலும் தெரிவித்திருப்பதாவது, 

உலகிலுள்ள இராணுவத்தினரில் இலங்கை இராணுவம்  ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்கும்  இராணுவமாகும். இதில் மாற்றுக் கருத்துக்கு  இடமில்லை. 

இதன்  காரணமாக கடந்த காலங்களில் சமாதான படைகளில்  எமது படையினர் இணைத்துக்கொள்ளப்பட்டனர். 

ஆனால் கடந்த  ஆட்சிக் காலத்தில் உயர் மட்டங்களிலிருந்து கிடைத்த உத்தரவுகளால் குற்றங்களை செய்திருக்கலாம். எனவே அதன் உண்மைத்  தன்மை தொடர்பில் விசாரித்து அறிவதில் எந்தவிதமான தவறும் இல்லை. 

யுத்தத்தின்  இறுதிக் கட்டத்தின் போது புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரபல்யமான  தலைவர்கள் பல கோடி ரூபாய்களை  பாதுகாப்பு தரப்பின் உயரதிகாரிகளுக்கு  வழங்கி அரச ஒத்துழைப்புடன்  தப்பிச் சென்றுள்ளனர். 

எனக்கு தெரிந்த அளவில் பாதுகாப்பு அமைச்சின்  உயரதிகாரிகளும்  இக்கொடுக்கல் வாங்கல்களில் தொடர்புபட்டிருந்தனர். 

அன்றைய பாதுகாப்பு  செயலாளருக்கு இது நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளவர்கள்  தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.  

இத் தகவல்களில் உண்மையும்  இருக்கலாம். பொய்களும் இருக்கலாம். எனவே காணாமல்போனோரை கண்டறியும் அலுவலகம் மூலம் இதன் உண்மையை கண்டறிய  முடியும். 

சர்வதேச விசாரணைகள், கலப்பு  நீதிமன்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவைப்பட்டால் சர்வதேச  ஆலோசனைகள் பெறப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09