போரினால் முற்றுமுழுதாக அழிவுக்குட்படுத்தப்பட்ட வடக்கு, கிழக்கிலே இந்திய அரசாங்கத்தினால் 40 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும் எமது மக்களின் வீடில்லாப் பிரச்சினைக்கு இதுவரையிலும் முழுமையான தீர்வு காணப்பட்டிருக்கவில்லை. வடக்கு – கிழக்கில் இவ்வாறு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திலும் ஏனைய அபிவிருத்திப் பணிகளின் போது ஒன்றிணைந்த செயற்றிட்டத்தை முன்னெடுப்பதே சிறந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு காணப்படாதிருக்கின்றது. விரைவில் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதுடன் அவர்களுக்கான வீட்டுப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2016 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவை எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
வீடில்லாப் பிரச்சினை என்பது பாரிய பிரச்சினையாக இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் மாத்திரம் இரண்டு இலட்சத்து 16 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இப்பகுதிகளை மையப்படுத்தி இந்திய அரசாங்கத்தினால் இனங்காணப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் 40 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் எமது மக்களின் வீடில்லாப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைத்துவிடவில்லை.
இன்றைய நிலையிலும் எமது மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். உறவினர்கள், நண்பர்களது வீடுகளில் இருக்கின்றனர். தென்னிந்தியாவிலே 111 முகாம்களில் 168000 பேர் அகதிகளாக இருந்து வருகின்றனர். அவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவேண்டும் என்றே விரும்புகின்றனர். எனினும் இராணுவம் அவர்களது காணிகளை அக்கிரமிப்பு செய்திருக்கின்றமையால் எமது மக்கள் தமது காணிகளுக்கு திரும்ப முடியாதுள்ளது. இதே நிலை வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்றது.
எனவே மீள்குடியேற்றம், காணி மீட்பு, வீட்டு நிர்மாணம் ஆகிய விடயங்களில் இணைந்த குழுவாக செயற்படுதல் இங்கு அவசியமாகின்றது. இதனை இரண்டு தினங்களுக்கு முன்பு கூட இந்த சபையில் வலியுறுத்தியிருந்தேன்.
இதேபோன்று தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை பற்றியும் இங்கு பேச வேண்டியுள்ளது.
அவர்களது சம்பளப் பேச்சுவார்த்தை இன்னும் முடிவுறாத நிலை காணப்படுகின்றது. இவ்விடயத்தில் தீர்வுகாணப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோன்று அந்த மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கும் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முற்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக போரினால் பாதுகாக்கப்பட்ட எமது பிரதேசம் தொடர்பில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM