(எம்.மனோசித்ரா)
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் கஞ்சா செடி வளர்த்தமை தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முகத்துவாரம் பிரதேசத்தில் 6 கிராம் ஹெரோயினுடன் 30 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட 13 இலட்சம் ரூபாய் பணமும் குறித்த சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 7 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
பணாமுர - முல்லெட்டியாவல பிரதேசத்தில் கஞ்சா செடி வளர்த்தமை தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது பயிரிடப்பட்டிருந்த 3,075 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட 50 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM