(ஜெ.அனோஜன்)
நவீன வரலாற்றில் மிகவும் சிக்கலான 2020 ஒலிம்பிக் போட்டிகள் இறுதியாக வெள்ளிக்கிழமை டோக்கியோவில் தொடக்க நிகழ்வுகளுடன் ஆரம்பமாகவுள்ளது.
ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் இன்று மாலை ஆரம்பமாகும். தொடக்க விழா 3 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டத்திற்கு துளியும் பஞ்சம் இருக்காது.
ஜப்பானின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் பெறும்.
கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஜப்பானின் 47 மாகாணங்கள் அனைத்திற்கும் பயணித்த ஒலிம்பிக் சுடர் அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரபூர்வமாக தொடங்கி விடும்.
விழாவின் முக்கிய அம்சமாக 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன் கம்பீரமாக அணிவகுத்து செல்வார்கள்.
இதற்கிடையில், ரஷ்ய விளையாட்டு வீரர்கள் தங்கள் நாட்டின் அரசு வழங்கும் ஊக்கமருந்து திட்டத்தின் விளைவாக நடுநிலைக் கொடியின் கீழ் பங்கேற்பார்கள். அதே நேரத்தில் தொற்றுநோய் காரணமாக எந்த விளையாட்டு வீரர்களையும் வட கொரியா அனுப்பவில்லை.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அரங்கத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் பேரரசர் நருஹிடோ 32 ஆவது ஒலிம்பியாட் விளையாட்டுகளை திறந்த நிலையில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் போன்ற குறைந்த எண்ணிக்கையிலான பிரமுகர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
விளையாட்டு வீரர்கள் முகக் கவசம் அணியவும், அரங்கத்திற்குள் அணிவகுத்துச் செல்லும்போது உடல் ரீதியான தூரத்தைக் பராமறிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 தொற்று மற்றும் வைரஸ் தொடர்பான நான்காவது அவசரகால நிலையில் டோக்கியோ இருப்பதனால் ஜப்பான் உட்பட உலகெங்கிலும் உள்ள ஒலிம்பிக் ரசிகர்கள் போட்டிகளை நேரடியாக தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பிற சாதனங்களின் மூலமாக பார்வையிட உள்ளனர்.
அந்த நிலைமைகளுடன் இதுவரை விளையாட்டுகளுடன் தொடர்புடைய 90 க்கும் மேற்பட்டவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.
அதேநேரத்தில் கடந்த ஆறு மாத காலப் பகுதிகளில் தற்சமயம் தினசரி தொற்றாளர்கள் டோக்கியோவில் அதிகளவில் அடையாளம் காணப்படுகின்றனர்.
ஜப்பானிய தலைநகரம் வியாழக்கிழமை 1,979 புதிய கொரோனா தொற்றாளர்களை பதிவுசெய்தது.
ஒலிம்பிக் உலகளாவிய ஒற்றுமை மற்றும் வைரஸ் மீதான வெற்றியைக் குறிக்கும் என்று அமைப்பாளர்கள் நம்பினாலும், டோக்கியோ நகரம் தொடர்ந்தும் கொரோனாவின் பிடியில் உள்ளது.
விளையாட்டுக்களுக்கு பொதுமக்களின் எதிர்ப்பு மிகவும் கடுமையான உள்ள நிலையில் பெருகிய எண்ணிக்கையிலான அரசியல்வாதிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் கோடைகால விளையாட்டு திறப்பு நிகழ்வை பார்வையிடுவதை தவிர்த்துள்ளனர்.
நருஹிடோ பேரரசர் கூட வெள்ளிக்கிழமை விளையாட்டு போட்டியை திறம்பட அறிவிக்கும்போது “கொண்டாடுதல்” என்ற வார்த்தையைத் தவிர்ப்பது குறித்து பரிசீலிப்பதாகக் கூறினார்.
ஜூலை தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் கொவிட்-19 தொற்றாளர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் மற்றும் வெளியே உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்களிடையே கண்டறியப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் ஜப்பானின் கடுமையான வெப்பத்தின் தாக்கமும் அன்றாடம் 30 செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளமையினால், அதுவும் போட்டிகளுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக ஜப்பானில் 860,000 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 15,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC)), விளையாட்டுக்கள் - உள்ளூர் மற்றும் வெளிநாட்டிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து பார்வையாளர்களும் தடைசெய்யப்பட்டுள்ள விளையாட்டுக்கள் "பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பானவை" என்று வலியுறுத்தி வருகின்றது.
200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த சுமார் 11,000 விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய குழுவினர் தற்சமயம் ஒலிம்பிக் கிராமத்தில் முற்றுகையிடப்பட்டுள்ளார்கள்.
வீரர்கள் அனைவரும் உயிர் பாதுகாப்பு குமிழ்களுடன் 33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப்பதக்கத்துக்காக மோதுகின்றனர்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒலிம்பிக்கை நடத்துவதற்கான முயற்சியை ஜப்பான் வென்றது, 2011 இல் ஏற்பட்ட பேரழிவு பூகம்பம், சுனாமி மற்றும் அணுசக்தி பேரழிவிலிருந்து வடகிழக்கு பிராந்தியத்தின் புனரமைப்பை வெளிப்படுத்த விரும்புவதாகவும், அந்த கடினமான காலங்களில் வழங்கப்பட்ட ஆதரவுக்கு உலகின் பிற பகுதிகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாகவும் ஜப்பான் கூறியது .
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கை நடத்துவதற்கான செலவு ஏலம் எடுக்கப்பட்ட நேரத்தில் 734 பில்லியன் யென் (6.67 பில்லியன் அமெரிக்க டொலர் ) இலிருந்து 1.64 டிரில்லியன் யென் வரை கடுமையாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM