(எம்.மனோசித்ரா)
நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 467 கிலோ கிராம் கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளதோடு, ஹெரோயினுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மட்டக்குளி பிரதேசத்தில் 13 கிராம் ஹெரோயினுடன் 37 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி குற்ற விசாரணைப் பிரிவினரால் 14 கிராம் ஹெரோயினுடன் 34 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினரால் பெம்முல்ல பிரதேசத்தில் 4 கிராம் ஹெரோயினுடன் 63 வயதுடைய பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 9 இலட்சத்து 80 000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸாரால் நீர்கொழும்பு - கடற்கரை பகுதியிலிருந்து 467 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் மீட்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடல் மார்க்கமாக இந்த கஞ்சா தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM