(நா.தனுஜா)
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த டயகமவைச் சேர்ந்த 15 வயதான சிறுமி உயிரிழந்து ஐந்து நாட்கள் கடந்திருக்கும் நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டறிவதற்கு இதுவரையில் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் அரசாங்கம் வெட்கமடையவேண்டும்.
இதுவிடயத்தில் நிலவும் தொடர்ச்சியான மௌனமானது, இதன் பின்னால் யார் இருக்கின்றார்கள்? இது குறித்து மறைமுகமான கொடுக்கல், வாங்கல்கள் எவையேனும் இடம்பெறுகின்றதா? என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்திருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ரிஷாத் பதியுதீனின் வீட்டில் இடம்பெற்ற இச்சம்பவம் இனமோ, மதமோ அல்லது மொழியோ சம்பந்தப்பட்ட விடயமல்ல. மாறாக மனிதாபிமானத்துடன் தொடர்புடைய விடயமாகும்.
நாங்கள் எப்போதும் முஸ்லிம் சகோதரர்களுடன் கைகோர்த்து ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றோம். எனினும் இவ்விடயத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமில்லை.
குற்றமிழைத்தவர் எவராக இருந்தாலும், அவரை உடனடியாகக் கண்டறிந்து தண்டிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM