பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் இந்திய அரசாங்கத்தின் இலங்கைக்கான பதில் தூதுவர் வினோத் கே ஜேகப் ஆகியோருக்கிடையிலான நற்புறவு சந்திப்பொன்று இன்று (21.07.2021) இந்திய அரசாங்கத்தின் இலங்கைக்கான பதில் தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முன்னேடுக்கப்படுவதற்காக கல்வி,சுகாதார மற்றும் பொருளாதார,விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான யோசனைகள் தெரிவிக்கப்பட்டதுடன், இதன் போது இராஜாங்க அமைச்சரினால் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை மிகவிரைவில் முன்னெடுப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், இந்த கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி யோசனைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய அரசாங்கத்தின் இலங்கைக்கான பதில் தூதுவர் வினோத் கே ஜேகப்பினால் தெரிவிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் இந்திய அரசாங்கத்தின் இலங்கைக்கான பதில் தூதுவர் வினோத் கே ஜேகப் மற்றும் பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான், அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷத டி சில்வா மற்றும் இந்திய தூதரகத்தின் முதல் செயலாளர் எல்டோர் மெத்திவ் உள்ளிட்ட இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM