(இராஜதுரை ஹஷான்)
வலு சக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் நாட்டு மக்களே தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள்.
எரிபொருள் விலையேற்றத்திற்கு ஊடகங்களுக்கு மத்தியில் எதிர்ப்பு தெரிவித்த பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் உண்மையான நிலைப்பாட்டை நாட்டு மக்கள் தற்போது நன்கு அறிந்து கொண்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விலையேற்றத்தினால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் எவ்விதத்திலும் நிவாரணம் வழங்கவில்லை.
ஆளும் தரப்பினர் நாட்டு மக்கள் மீது கொண்டுள்ள பற்றினை வெளிக்கொண்டு வரும் வகையில் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தோம்.
நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது ஊடகங்களுக்கு மத்தியில் போலியாக அதிருப்தி தெரிவித்த ஆளும் தரப்பினரின் உண்மை தன்மையினை நாட்டு மக்கள் நன்கு அறிந்துக் கொண்டார்கள். ஆகவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக நாட்டு மக்களே தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM