எமது நாட்டில் இனிவரும் காலங்களில் நடைபெறும் எந்தவொரு தேர்தல்களின்போதும் இனவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி இடமளிக்கப்போவதில்லை என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்
ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமாகிய மைத்திரிபால சிறிசேன
தலைமையில் அனைத்துவிதமான செயற்பாடுகளும்முன்னெடுக்கப்படும் எனவும்குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர்தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவுவின் தீர்மானத்தின் படியும் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தின் படியும் இனிவரும் காலங்களில் எமது நாட்டில் நடைபெறும் எந்த ஒரு தேர்தல்களின்போதும் எமது கட்சி ரீதியில்இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவோ அல்லது இனவாதிகளுக்கு இடமளிக்க போவது இல்லை.
இது தொடர்பில்நாம் உறுதியாகவே உள்ளோம். இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள்சேர்ந்து தேசிய அரசாங்கம்ஒன்றை ஸ்தாபித்து ஒன்றிணைந்த ஆட்சியின் மூலம் மக்களுக்கான பல்வேறு சேவையினை முன்னெடுத்துவருகின்றது. அந்தவகையில் இந்த அரசாங்கத்தின் கீழ் நாட்டின் தேசிய பிரச்சனை உட்பட மக்கள்எதிர்பார்க்கும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம், தேர்தல் முறையில் உள்ளடக்க வேண்டிய மாற்றங்களை உள்வாங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
வரவு செலவு திட்டம்
தேசிய அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான இரண்டாம் வாசிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இதில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு அதிருப்தி நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் பல்வேறு விடயங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளமையானது மிகவும் பராட்டதக்கது அந்த வகையில் எமது நாட்டின் வரலாற்றில்மக்களின் தேவைகளை அறிந்து அதிகளவான மாற்றங்களை உள்வாங்கிய வரவு செலவு திட்டம் இதுவே ஆகும்.
தேசிய அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்டமா அல்லது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வரவு செலவு திட்டமா என பராளுமன்றத்தில் சிலர்கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறான கேள்விகள் மூலம் பிரிவினவாதமே அவர்களிடம் இருப்பதாக புலப்படுகிறது. இந்த அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமே இதன்கீழே பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்டோர் உள்வாங்கப்படுகின்றார்கள் என்பதனை அனைவரும் புறிந்துகொள்ள வேண்டும்.
இராண்டாம் வாசிப்பின் பின்னர் வரவு செலவு திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. கடந்த வாக்கெடுப்பினை நோக்குவோமானால் இதற்கு அதிகளவான அதரவு கிடைக்கிப்பெற்றிருந்தது. அந்தவகையில் சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு தேசிய அரசாங்கம் தலைசாய்க்க வேண்டிய தேவையில்லை என நினைத்திருந்தால் இரண்டாம் வசிப்புக்கு பின்னரும் வரவு செலவு திட்டத்தில் மாற்றங்களை உள்வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
இவ்வாறான நிலையில் நாம் மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்தே இதில் பல்வேறு மாற்றங்களை உள்வாங்கினோம். இனிவரும் காலங்களில் சில விடயங்கள்தொடர்பில் மாற்றங்களை எதிர்பார்க்கின்றோம்.
எதிர்வரும் வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பில் முன்னைய வாக்கெடுப்பிலும் ாக்கெடுப்பிலும் பார்க்க அதி கூடிய பெருபான்மை வாக்குகளின் பிரகாரம் தேசிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இது மக்களுக்கான வரவு செலவு திட்டமே ஆகும்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல்
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தோ்தலில் ஜனாதிபதியும் கட்சியின்தலைவருமாகிய மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனைவரையும்ஒன்றினைத்து தோ்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM