வடமேற்கு நைஜீரியாவின் பாதுகாப்பு அதிகாரிகள் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்களாக சுமார் 100 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த குழு ஜூன் 8 அன்று ஜம்பாரா மாநிலத்தில் கடத்தப்பட்டது. இதன்போது நால்வரும் கொல்லப்பட்டனர்.
ஜம்பாரா மாநில அரசு எந்தவிதமான மீட்கும் தொகையும் இன்றி கடத்தப்பட்டவர்களை மீட்டுள்ளதாக கூறியுள்ளது. எனினும் அது தொடர்பான மேலதிக விபரங்களை வழங்கவில்லை.
இந் நிலையில் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதற்கும், அதன் பின்னர் அவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்புவதற்கும் நைஜீரிய பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சமீபத்திய மாதங்களில் நைஜீரியாவில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
2020 டிசம்பரிலிருந்து 1,000 க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ளதுடன், சிலர் கடத்தல் காரர்களினால் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM