கொவிட்-19 வரைஸ் தோற்றம் குறித்த சந்தேகங்களுக்கு சீன தலைவர்கள் உறுதியாக பதிலளிக்க வேண்டும் என்பதை அமெரிக்க வலியுறுத்த வேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வெளியேறியது என்பதற்கான வலுவான சான்றுகள் பகிரப்படுகின்றன. எனவே அனைத்துலகத்திற்கும் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனில் உரையாற்றுகையில் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் கொரோனா வைரஸ் பணிக்குழுவை வழிநடத்திய மைக் பென்ஸ் அந்த ஆதாரங்களை விரிவாகக் இங்கு வெளிப்படுத்த வில்லை. மாறாக தற்போதைய அமெரிக்க ஆட்சியாளர்கள் உண்மைகளை கண்டறிய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மறுப்புறம் ஒரு சலுகையை கோராமல் சீன கட்டுப்பாட்டில் உள்ள உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைந்ததற்காகவும், பிற்கால போக்கை மாற்றுவதற்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்த எங்கள் நிர்வாகத்தின் விசாரணையை நிறுத்தியதற்காகவும் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM