(எம்.மனோசித்ரா)
இலங்கையில் நீதித்துறைப் பயிற்சிக் கல்லூரியை நிறுவுவதற்கான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி புவனேக அலுவிஹார தலைமையில் துறைசார் நிபுணர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நீதிபதிகளின் நிறுவனம், இலங்கையிலுள்ள நீதித்துறைக்காக அமைந்துள்ள ஒரேயொரு கற்கை நிறுவனமாவதுடன், அதன் மூலம் நீதிபதிகளுக்குப் போதுமான பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்காகவும் இயலளவை அதிகரிப்பதற்காகவும் கிடைக்கின்ற ஒத்துழைப்புக்கள் தொடர்பாக திருப்தியடைய முடியாதுள்ளது.
உலகில் நீதிபதிகளுக்குத் தேவையான கல்வியை வழங்குவதற்காகவும் பயிற்சிகளை வழங்குவதற்காகவும் பல்கலைக்கழகத்திற்குச் சமாந்தரமான வகையிலான வசதிகளுடன் கூடிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன.
நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, சட்ட மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தல் போன்ற துறைகளின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. அதே போல் நீதிமன்ற நீதிபதிகளின் அறிவு மற்றும் திறன்களை அதிகரிப்பதற்காக தேவையான வசதிகளை வழங்க வேண்டியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் நீதித்துறைப் பயிற்சிக் கல்லூரியை நிறுவுவதற்கான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி புவனேக அலுவிஹார தலைமையில் துறைசார் நிபுணர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM