(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
எரிபொருள் விலையையோ அத்தியாவசிய பொருட்களின் விலையையோ அரசாங்கம் விரும்பி அதிகரிப்பதில்லை.
மாறாக உலகளாவிய கொவிட் நெருக்கடியால் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் காரணமாகவே நாமும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எந்தவொரு அரசாங்கமும் எரிபொருள் அல்லது அத்தியாவசிய பொருட்களின் விலைகளை விருப்பத்துடன் அதிகரிப்பதில்லை.
எரிபொருள் கூட்டுத்தாபனம் நட்டமடைந்து செல்வது காலாகாலமாக இடம்பெறும் பிரச்சினையாகும். இன்று நேற்று உருவானதல்ல இது 20, 30 வருடங்களாக நாம் எதிர்கொண்டுவரும் சவால்களாகும்.
இது தற்காலிகமான அதிகரிப்பாகும். பொதுஜன பெரமுனவின் கருத்தையே அதன் பொதுச் செயலாளர் கூறியிருந்தார்.
அத்துடன் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை நாம் பாதுகாப்போம். நாட்டை சுபீட்சத்துக்கு கொண்டுசெல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM