முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த 15 வயது சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தமை மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது. மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு சிறுமிக்கான நீதியை பெற்றுகொடுக்க வேண்டுமென பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
மலையக மக்களின் வறுமை நிலையை ஒருசிலர் தவறான முறையில் பயன்படுத்தி தரகர்களாக செயற்பட்டு கல்விகற்கவேண்டிய சிறுவர்களை வேலைக்கமர்த்தி வருமானம் பெறுகின்றனர்.
இவ்வாறு தங்களுடைய தரகு பணத்தை பெறும் தரகர்கள் அந்த சிறுவர்கள் பற்றியோ அவர்களின் பெற்றோர் பற்றியோ நினைத்துப்பார்ப்பதில்லை. இவ்வாறான நிலை ஏனைய சிறுவர்களுக்கும் இடம்பெற்றிருக்கின்றது.
இதுதொடர்பில், பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனையை நீதித்துறை வழங்கும்.
அத்தோடு, மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு சிறுமிக்கான நீதியை பெற்றுகொடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM