மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனைக்கு சுமார் 13 இலச்சம் ரூபா பெறுமதியான 100 ஜஸ் போதைப் பொருளை காரில் கடத்திச் சென்ற பிரபல போதைப்பொருள் வியாபாரியொருவர் உட்பட 3 பேரை வாழைச்சேனையில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) இரவு இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலையிலுள்ள இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு இராணுவ புலனாய்வு பிரிவினர் கும்புறுமூலைச் சந்தியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனையை நோக்கி பயணித்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.
இதன் போது காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 13 இலச்சம் ரூபா பெறுமதியான 100 கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த குறித்த போதைபொருள் வியாபாரியின் வீட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டபோது குறித்த வியாபாரியும் அவரது தாயாரும் தப்பி ஓடிய நிலையில் 15 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் ஒருவரை கைது செய்ததுடன் அங்கு போதைப்பொருள் போதி செய்யும் இயந்திரங்கள் உட்பட பலவற்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM