சதீஷ் கிருஷ்ணபிள்ளை
பல வருடகால இடைவெளிக்குப் பின்னர், கியூபா மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.ஒரு வீரியமான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஒருபுறத்தில் பொருளாதார சிக்கல்களால்வாழ்வதே கஷ்டமான சூழ்நிலை. மறுபுறத்தில் பெருந்தொற்றின் தீவிர தாக்கம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் ஹவானாவிற்கு அருகிலுள்ள புறநகர்ப் பகுதியில்ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது. விரைவில், நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள். பசி,பட்டினியால் வாடுகிறோம். வேலைவாய்ப்பு இல்லை. குடிநீருக்குத் தட்டுப்பாடு. மின்வெட்டால்அவதிப்படுகிறோம் என்றெல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
ஒரு கட்டத்தில், 62 வருடகால கம்யூனிஸ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. ஊழலும்,அராஜகமும் தலைவிரித்தாடிய பெட்டிஸ்ட்டா ஆட்சிக்கு எதிராக ஆயுதப் புரட்சி செய்து, ஆட்சியைப்பெற்ற மார்க்ஸிஸ-லெனினிஸ கோட்பாடுகளுக்கு அமைய நாட்டை ஆண்டார் பிடெல் காஸ்ட்ரோ.
அந்த மாபெரும் தலைவனின் வழிவந்த ஆட்சியில், பொதுவுடைமைக் கொள்கைகளுக்குஎதிராக மக்கள் வெகுவாகக் கிளர்ந்தெழுந்த முதற்சந்தர்ப்பமென வர்ணிக்கப்பட்ட போராட்டம்.ஜனாதிபதி மிகெல் டயஸ் கெனல், வீதி ஆர்ப்பாட்டங்களை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.பாதுகாப்புப் படைகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-18#page-8
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM