கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியாவில் பாதிப்புகள் உச்சமடைந்தது. இதன் விளைவாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. தடுப்பூசி ஏற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதனால் இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு ஓரளவு குறையத்தொடங்கியுள்ளது.
நேற்றை தினத்தைவிட இன்றைய தினம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 38 ஆயிரத்து 164 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதனடிப்படையில் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 11 இலட்சத்து 44 ஆயிரத்து 229 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நேற்றைய தினத்தில் 499 பேர் உயிரிழந்துள்ளனர். அதனடிப்படையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,14,108 ஆக உயர்வடைந்துள்ளதுடன் கடந்த 24 மணிநேரத்தில் 38,660 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 03 இலட்சத்து எட்டாயிரத்து 456 ஆக உயர்வடைந்துள்ளது. இதன் பிரகாரம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோரது சதவிகிதம் 97.31 அமைந்துள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 4,21,665 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோன்று இந்தியா முழுவதும் இதுவரை 40,64,81,493 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM