என்.கண்ணன்
கொழும்பின் அண்மைய அரசியல் நிலவரங்கள், கொரோனா தொற்றுக்கும் அப்பால் இராஜதந்திர தரப்புகளை மும்முரமாக செயற்படத் தூண்டியிருக்கின்றன.
குறிப்பாக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பிரதான நாடுகள் இலங்கை அரசியலில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.
இதன் தாக்கம் தமிழ் அரசியல் பரப்பிலும் எதிரொலிக்கத் தவறவில்லை. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் நடக்கவிருந்த சந்திப்பு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடைசி நேரத்தில் பிற்போடப்பட்ட, பின்னணியில் தான் இந்த நிலைமை தோன்றியிருக்கிறது.
ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி என்ற வகையில், குறித்த நிகழ்ச்சி நிரலை- குறித்த நேரத்தில் முன்னெடுக்கும், பழக்கத்தைக் கொண்டவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், நடைமுறையில் அவர் அந்த இராணுவ ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க முடியாதவராகவே உள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு பிற்போடப்பட்டது போலவே வேறு பல சந்திப்புகளும் கூட அண்மைய நாட்களில் ஜனாதிபதியினால் பிற்போடப்பட்டன அல்லது இரத்துச் செய்யப்பட்டன.
இந்தச் சந்திப்புகள் பிற்போடப்பட்டமை அல்லது இரத்துச் செய்யப்பட்டமைக்கு - வெவ்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம்.
இந்தச் சந்திப்பு பிற்போடப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் ஆகியோர் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.
இந்த மூன்று சந்திப்புகளும் குறுகிய காலப்பகுதிக்குள் நடந்திருப்பதும், குறித்த நாடுகளின் தூதுவர்களின் அழைப்பின் பேரில் இடம்பெற்றிருப்பதும் கவனிக்கத்தக்க விடயங்கள்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-18#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM