நேர்காணல்:-ஆர்.யசி
- மூன்றரைஇலட்சம் பேருக்கும் உணவு அனுப்புகிறேன், சாப்பிட்டுசண்டையிடுமாறு தமிழிலே கூறிய மஹிந்தகோவமாக எழுந்து சென்றுவிட்டார்.
- ஹிட்லர்முசோலினி பற்றி இன்றும் பேசுகின்றோம்.அதேபோன்று சம்பந்தன் சேனாதிராஜா ஆகியோரின் தவறுகளும் வரலாறு கடந்து விமர்சிக்கப்படவேண்டியது.
- 22 எம்.பி.க்கள் இருந்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்த ஆதாரங்கள் என்னிடமுள்ளன.
- ராஜபக்ஷஎன்னை அழைத்து ‘சமஷ்டி’ என்ற வார்த்தையைஉங்களின் அறிக்கைகளில் பயன்படுத்தாது இந்திய முறைமை என்றுபயன்படுத்துங்கள் என்றார்.
தமிழர்விடுதலை கூட்டணியில் தமிழர் பிரதிநிதிகள் ஒன்றிணைந்துதமிழ் மக்களை மீட்கும் படையைஉருவாக்க வேண்டும். எமது சமூகத்தில்உள்ள கற்றறிந்த, நிபுணத்துவம் பெற்ற, சட்டம் தெரிந்தஅதேபோல் தமிழர் மீது பற்றுகொண்டவர்களை மக்களின் பிரதிநிதிகளாக உருவாக்க வேண்டும். தமிழர் தலைமைகள் எனகூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் பாராளுமன்ற தமிழ் பிரதிநிதிகள் அனைவரையும்நிராகரித்து புதிய தலைமைகளை பாராளுமன்றத்துக்குஅனுப்ப வேண்டுமென தமிழர் விடுதலை கூட்டணியின்செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாகவருமாறு,
கேள்வி:-அரசியலில் ஈபட்டபோது நீங்கள் இலக்கு வைக்கப்பட்டதாககூறுகின்றீர்களே உங்களை இலக்கு வைத்ததுயார்?
பதில்:-விடுதலைப்புலிகள் தான், விடுதலைப்புலிகள் என்றுஒட்டுமொத்தமாக கூறுவதை விடவும் புலிகள்அமைப்பில் ஒரு சிலருக்கு இலக்காகி இருந்தேன். ஆனால் புலிகளின் கருத்தைபிழையென கூறவில்லை, அவர்களின் கருத்துடன் மாற்றுக்கருத்தை கொண்டிருந்தேன். பிரபாகரனுக்கு பல கடிதங்களை எழுதியுள்ளேன்.அன்புள்ள தம்பி என்றே எழுதுவேன்.ஆனால் அவர் எனக்கு பதில்கடிதம் எழுதவில்லை. இறுதியாக அவரை சந்தித்த போதேஒரு விடயத்தை உணர்ந்தேன்.
அவருக்கு என்மீது பற்று இருந்தது.அந்த சந்திப்பில் என்னை சங்கரி அண்ணன்என்றே அவர் அழைத்தார். நகைப்புக்குரியசில விடயங்களை தெரிவித்தார். ஆகவே எனக்கு எதிரிபிரபாகரன் அல்ல புலிகளில் உள்ளஇரண்டாம் நிலைத் தலைவர்கள் தான்என்பதை விளங்கிக்கொண்டேன். உண்மைய சொல்வதென்றால் பிரபாகரனைபலர் தமது சுயநல செயற்பாடுகளுக்காகபயன்படுத்திக்கொண்டனர்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/varthaka-ula/2021-07-18#page-7
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM