இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமான சேவைகளின் இடைநீக்கம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக துபாய் விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஜூலை 18 ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.
புதிய உத்தரவுகளுக்கு அமைவாக மேற்கண்ட நான்கு நாடுகளின் விமானங்கள் குறைந்தபட்சம் ஜூலை 25 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 14 நாட்களில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை வழியாக இணைந்த பயணிகள் வேறு எந்த இடத்திலிருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ், தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டினர், ஐக்கிய அரபு எமிரேட் வதிவிட விசாக்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கொவிட் ‑ 19 நெறிமுறைகளுக்கு இணங்க தூதரக பணிகளின் உறுப்பினர்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், எமிரேட்ஸ் இந்த தடை ஜூலை 21 வரை நீட்டிக்கப்படும் என்று கூறியிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM