அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசிகளின் மேலும் 60,000 டோஸ்கள் இன்று காலை கட்டூநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
இந்த தடுப்பூசி அளவுகள் முதலில் அமெரிக்காவிலிருந்து கட்டாருக்கும், பின்னர் தோஹாவிலிருந்து இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
405 கிலோகிராம் எடையுள்ள இந்த தடுப்பூசி அளவுகள் 12 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் எடுத்து வரப்பட்டுள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் சிறப்பு லொறிகளுடன் உதவியுடன் தடுப்பூசி அளவுகள் விமான நிலையத்தில் இருந்து கொழும்பில் உள்ள மத்திய கிடங்கு வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது இலங்கை கொள்வனவு செய்த ஃபைசர் தடுப்பூசி அளவுகளில் இரண்டாவது ஆகும்.
முன்னதாக கடந்த 05 ஆம் திகதி ஃபைசர் தடுப்பூசிகளின் 26,000 டோஸ்கள் நாட்டை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM