(இராஜதுரை ஹஷான்)
இலவச கல்வியை இராணுவ மயமாக்கும் நிகழ்சி நிரலுக்கு அமைய செயற்படுகிறது. பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை அரசாங்கம் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும். இலவச கல்வியை தனியார் மயப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியினர், ஆசிரிய தொழிற்சங்கத்தினர் மற்றும் சிவில் அமைப்பினர் ஒன்றினைந்து இன்று சனிக்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலவச கல்வியை தனியார் மயப்படுத்தும் நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கத்தை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து செல்கிறது.
சிவில் சேவைகள் அனைத்தும் தற்போது இராணுவ மயப்படுத்தலுக்கு அடித்தளமிட்டுள்ளது.
இதனிடையில் இலவச கல்வியையும் இராணுவ மயமாக்கும் முயற்சியை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM