உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் : காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் விடுதலை

Published By: Digital Desk 4

16 Jul, 2021 | 09:56 PM
image

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட  காத்தான்குடியைச் இருவருக்கு எதிராக போதிய சாட்சி இல்லாத காரணத்தால் வழக்கு தொடரமுடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அறிவிக்கப்பட்டதையடுத்து இருவரையும் இந்த வழக்கில் இருந்து கடந்த புதன்கிழமை (14) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். 

கடந்த 21.4.2019  உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் காத்தான்குடியை சேர்ந்தவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றிய ஒருவரை கடந்த 2019 ஏப்ரல் 28 ஆம் திகதியும்  அவ்வாறே கடந்த 2019 யூன் 20 ஆம் திகதி காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவரையும்  சந்தேகத்தில் கைதுசெய்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். 

இந்த நிலையில் இருவரையும் கடந்த 2020 ஒகஸ்ட் மாதம் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டு தொடர்ந்தும் வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றில் ஆஜராகி வந்துள்ள இருவருது வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரிடம் இருந்து இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர போதுமான சாட்சியங்கள் இல்லை என மட்டக்களப்பு நீதிமன்றிற்கும் பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்  நகர்வு மனு தாக்குதல் செய்யப்பட்டு வழக்கு எடுக்கப்பட்டதையடுத்து இருவரையும் நீதவான் ஏ.சி.எம் றிஸ்வான் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இருவருக்கும் எதிராக வழக்கிற்கு போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08