(இராஜதுரை ஹஷான்)
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் எதிர் தரப்பினர் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்கவில்லை.
இதனை பிரதான குறைப்பாடாக கருத வேண்டும். எதிர் தரப்பினர் குறிப்பிடுவதை போன்று இச்சட்ட மூலம் இராணுவ மயமாக்கலை நோக்கி செல்லவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக எதிர்க்கட்சியனரும், ஆசிரிய சங்கத்தினரும் போர் கொடி தூக்குவது அடிப்படையற்றது.
கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்யும் போது பொலிஸார் செயற்பட்ட விதமும் , அதனை தொடர்ந்து ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பில் குறிப்பிட்ட கருத்துக்கள் வெறுக்கத்தக்கன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM