கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி முற்றுகையிடப்பட்டு 4 கனரக வாகனங்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வனப்பகுதியிலேயே குறித்த முறையற்ற கிரவல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் மண் அகழ்வாராய்ச்சி தள சட்ட பிரிவினை அமுலாக்கும் அதிகாரிகள் மற்றும் இராணுவப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
இதன்போது கிரவல் அகழ்விற்கு அனுமதிக்கப்பட்டமைக்கு மாறாக அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மீது நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மேலதிகமாக அகழ்வு மேற்கொள்ளப்பட்டமை மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மாறாக 20 அடிக்க மேல் அகழ்வு மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்பட்ட 4 கனரக வாகனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த கிரவல் அனுமதி பெற்றுள்ள நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஐயங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிசார் ஊடாக நீதிமன்றில் வழங்கு தொடரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரதேசத்தில் 2010ம் ஆண்டுக்கு பின்னர் பாரிய கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில் அவ்விடயம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகளும் வெளிக்கொண்டு வரப்பட்டன. ஆனாலும், குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்ததுடன், அங்கு சுற்றாடலை பாதிக்கும் வகையில் அகழ்வுப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கொழும்பிலிருந்து வருகை தந்த புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் மண் அகழ்வாராய்ச்சி தள சட்ட பிரிவினை அமுலாக்கும் அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி இராணுவப் புலனாய்வுப்பிரிவு உத்தியோகத்தர்களும் குறித்த பகுதியை முற்றுகையிட்டு சோதனையிட்டு குறித்த சட்டவிரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்தியதுடன், சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையானது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை இதுவரை கண்டுகொள்ளாத பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், வனவள பாதுகாப்பு பிரிவு, வனஜீவராசிகள் திணைக்களம், கனியவள திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM