முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஆணொருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான முறிகண்டி செல்வபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
154ம் கட்டை ஏ9 வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் உரிமையாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் 61 வயதுடைய குஞ்சுமோகன் அசோகன் என்ற குடும்பத்தர் என பொலிசார் குறிப்பிடுகின்றனர்.
குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவது தொடர்பில் அயலவர்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலிற்கு அமைவாக பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலமாக அடையாளம் காணப்பட்டவரின் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பிள்ளைகள் தொழிலின் நிமித்த வேறுபிரதேசத்தில் வாழ்ந்து வரும் நிலையில் சம்பவம் இடம்பெற்றள்ளது.
ஆயினும் உயிரிழப்பு தொடர்பில் பொலிசார் பல்கோண விசாரணைகளை மேற்கொண்டு வருகின்னறனர். சம்ப இடத்திற்கு தடயவியல் பொலிசாரும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வரும் நிலயைில், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM