முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வீடொன்றில் ஆணின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 3

16 Jul, 2021 | 03:21 PM
image

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஆணொருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சடலம் இன்று வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான முறிகண்டி செல்வபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

154ம் கட்டை ஏ9 வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் உரிமையாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 61 வயதுடைய குஞ்சுமோகன் அசோகன் என்ற குடும்பத்தர் என பொலிசார் குறிப்பிடுகின்றனர். 

குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவது தொடர்பில் அயலவர்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த தகவலிற்கு அமைவாக பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலமாக அடையாளம் காணப்பட்டவரின் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பிள்ளைகள் தொழிலின் நிமித்த வேறுபிரதேசத்தில் வாழ்ந்து வரும் நிலையில் சம்பவம் இடம்பெற்றள்ளது. 

ஆயினும் உயிரிழப்பு தொடர்பில் பொலிசார் பல்கோண விசாரணைகளை மேற்கொண்டு வருகின்னறனர். சம்ப இடத்திற்கு தடயவியல் பொலிசாரும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வரும் நிலயைில், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31