பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்தில் பணிபுரிந்த 16 வயதுடைய சிறுமி பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு -07 பெளத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் குறித்த சிறுமி வீட்டுப் பணியாளராக பணிபுரிந்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் சிறுமி, ஹட்டன் - டயகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
கடந்த 3 ஆம் திகதி வெள்ளியன்று உடலில் தீக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.
நீதிவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகள் நேற்று மாலை நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரிஷாத் பதியூதீன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM