குழந்தைப்பேறு என்பது எல்லாத் தம்பதிகளும் வேண்டும் விரும்பும் பொதுவான ஒரு விஷயம்தான். பலர் இந்த விஷயமாக ஆசீர்வதிக்கப்பட்டாலும் சிலருக்கு இந்த சந்தோஷம் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.. எல்லா விரல்களும் ஒன்றுபோல இருப்பதில்லை இல்லையா? அதுபோலத்தான் எல்லா தம்பதிகளுக்கும் இந்த விஷயம் ஒரே சமயம், தாங்கள் எதிர்பார்ப்பது போல நடந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது.
இன்றும் சரி, அன்றும் சரி… திருமணமான தம்பதிகளுக்கு அவர்களுடைய குடும்பங்கள் கொடுக்கும் அதிகப்படியான அவகாசம் மூன்று மாதங்கள்தான். அதன் பிறகு ‘இன்னும் உண்டாகலையா..?’ என்கிற கேள்விகளால் அந்தத் தம்பதியை அரித்தெடுக்கத் தொடங்கி விடுகிறார்கள். அவர்களுடைய உறவினர்களும் நண்பர்கள் வட்டமும்.
குழந்தையின்மைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இவை அனைத்துக்கும் இன்றைய நவீன மருத்துவத்தில் சிகிச்சை உண்டு
பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் இரு முட்டை பைகள், இரு கருக்குழாய்கள், கருப்பை, கருப்பை வாய் மற்றும் யோனி உள்ளது. இதனுடன் ஆணின் நல்ல விந்தணுக்களும் மரபணுக்களும் சேரவேண்டும். இந்த உறுப்புகள் நல்ல அமைப்புடனும் மற்றும் செயற்பாட்டுடனும் இருந்தால் குழந்தைபேறு ஒரு பிரச்சினையாகாது.
கருமுட்டை பையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பார்ப்போம்.
ஒவ்வொரு மாதமும் இனப்பெருக்க வயதிலிருக்கும் பெண்களின் முட்டை பையிலிருந்து முட்டை 14 ஆம் நாளிலிருந்து 16ஆம் நாளுக்குள் வெளிவருகிறது. இதிலிருந்து 14நாட்கள் கழித்து மாதவிடாய் வருகிறது. இதில் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்பட்டாலோ முட்டை வெளியேறாவிட்டாலோ கருவுறாமை பிரச்சினை ஏற்படுகிறது கருமுட்டை தான் கருதரிப்பதற்கு முதல்சுழி. வயது அதிகமாக அதிகமாக முட்டையின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைகிறது.
முட்டைப்பையின் பிரச்சினைகள் என்ன?
நீர்க்கட்டிகள், எண்டோமெட்ரியோஸிஸ், முட்டைப்பை கட்டிகள், கருமுட்டைப் பை செயலிழத்தல் மற்றும் கட்டிகள் ஆகும்
நீர்க்கட்டிகள்:
மிகவும் பரவலாக காணப்படும் வியாதி. இது முக்கியமாக ஹோர்மோன்களின் பிரச்சினைகள், சரிவராத உணவு, அதிகப்படியான உடல் பருமன் போன்றவற்றால் கட்டுகடங்காமல் போகிறது. இது ஒரு மரபுக் குறைபாடு. இதை சரியான உணவு மற்றும் பழக்கவழக்கங்களால் கட்டுப்படுத்த முடியுமேயொழிய முழுவதாக மீட்கமுடியாது.எங்கள் GBR கிளினிக்கில் நாங்கள் ஒரு சரியான உணவுமுறை திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இது எங்களின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்டது. எங்களிடம் IVFசிகிச்சைக்காக வந்த பல பேர் இந்த உணவு திட்டம் மற்றும் கவுன்ஸிலின் மூலமாக சாதாரணமாகவே கருத்தரித்துள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயம்
எண்டோமெட்ரியோஸிஸ்
இது மாதவிடாய் காலத்திலும் உடலுறவு கொள்ளும்போதும் மிக வலியையும் மனவுளைச்சலையும் கொடுக்கும். இதில் முட்டைகளின் எண்ணிக்கையும் தரமும் குறைந்தே காணப்படுகிறது. இது லேசாக இருக்கும்போது மருந்துகள் மற்றும் IUI மூலம் எளிதாக கருதரிக்கலாம் .இது கடுமையாகி பரவியபிறகு சத்திரசிகிச்சை மூலமாக கட்டிகளை விலக்கி IVFமூலமாக கருத்தரிக்கலாம்.
கருமுட்டை பை கட்டிகள்:
இவை சாதாரணமாக ஹோர்மோன் தொந்தரவாலும் கருமுட்டை வெடிக்காவிட்டாலும் வரும். இவற்றை எளிதாக மருந்துகளால் போக்கமுடியும். சில டெர்மால்ட் போன்ற கட்டிகளை லெப்ராஸ்கோப்பி மூலமாக நீக்கலாம்.
முட்டை பை செயலிழத்தல்
சிலபேருக்கு 40வயதிற்கு முன்னே மாதவிடாய் நின்றுபோகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் முட்டையும் அதன் தரமும் குறைபாடுடன் காணப்படும். உடனடியாக முட்டைதானம் மூலமாக சிகிச்சை பெற்றுப் பயனடையலாம்.
கேன்சர் கட்டிகள்:
சிறிய அளவிலிருந்தால் கட்டிகளை நீக்கிய பிறகு சிகிச்சை பெறலாம். முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு உடனடியாக IVFசெய்து கருவையோ அல்லது முட்டையையோ எடுத்து ஐஸில் வைக்கப்பட்டு பிறகு உபயோகப்படுத்தப்படும்
முட்டையின் தரமும் அதன் எண்ணிக்கையும் தான் நாம் வழங்கும் சிகிச்சையின் வெற்றிக்கு எடுத்துக்காட்டு. இவை இரண்டும் நன்றாக இருந்தாலே 75 வீதம் வெற்றியை கொடுக்க முடியும்.இவை இரண்டையும் தீர்மானிப்பது என்ன வென்றால் FSH, AMH என்கின்ற ஹோர்மோன்கள். முட்டையின் தரமும் அதன் எண்ணிக்கையும் சரியாக அமைய வயது மற்றும் மிகமுக்கியமாக நாம் கொடுக்கும் இன்ஜெக் ஷன்ஸ் மருந்துகள் தான் முதற்கண் காரணம். இதிலும் இன்ஜெக் ஷன்கள் நல்ல தரமானதாகவும் (Recombinent) என்று சொல்லப்படுகிறது. சரியான அளவு இருக்க வேண்டும் இது ஒவ்வொரு பெண்மணிக்கும் வெவ்வேறாக தேவைப்படும்.எல்லா பெண்மணிகளும் ஒன்றல்ல. எனவே மருந்துகளும் அவைகளின் பலனும் வெவ்வேறாக இருக்கும். அதேபோல் முட்டை பையிலிருந்து முட்டைகள் வளரும்போது அவற்றை கவனமாக பார்த்து டோஸ் அட்ஜட்மேன்ட் செய்ய வேண்டும் இல்லாவிடின் முட்டையின் எண்ணிக்கை குறைவாகவோ வளராமலோ அல்லது வெடித்தோ காணப்படும்.
எங்களது மையத்தில் இந்த கருத்தை மையமாக கொண்டு ஒவ்வொரு பெண்மணிக்கும் உகந்தவாறு இன்ஜெக் ஷன் மற்றும் மருந்துகள் கொடுத்து அவர்களை நாமே நேரடியாக கண்காணித்து அதிகமான தரமுள்ள முட்டைகளை வழங்குகிறோம். இதன்பின் IUF, IVF மற்றும் ICSI செய்யும்போது மிக சிறந்த வெற்றியை எங்களால் கொடுக்க இயலுகிறது. இதை நாங்கள் Personalifed Infertility Care என்கிறோம்.
இதோ ஓர் பெண்மணியின் அனுபவத்தை கூறுகிறேன்.
இவர் 36 வயதுடையவர் கல்யாணமாகி 10 வருடமாகிறது. Unexplainad Infertility முட்டையின் குவாலிட்டி மேல் சந்தேகம் இருந்தது.. இவருக்கு பல முறை சிகிச்சையளிக்கப்பட்டிருந்தது. பெரிய மருத்துவமனைகளில் இரண்டு முறை IVF செய்து தோல்வியடைந்தது. ஒவ்வொருமுறையும் கருமுட்டை எண்ணிக்கை குறைவாகவும் தரம் குறைவாக இருப்பதுதான் இவரது தோல்விக்கு காரணம் என சொல்லப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது .அவரின் ஹோர்மோன்கள் நல்ல நிலையில் இருந்தன.நல்ல தரமான இன்ஜக் ஷன்கள் போடப்பட்டன. எட்டாவது நாள் ஸ்கேன் செய்தபோது ஓரளவுக்கு முட்டைகள் வந்திருந்தன. நான் எதற்கும் இருக்கட்டுமே என்று DONOR EGGஐப் பற்றி பேசி வைத்தேன். இந்தமுறை நன்றாக இல்லாவிட்டால் அடுத்த முறை முயற்சி பண்ணுவோம் என்றார்கள். இந்தத் தம்பதியர் எங்களிடம் முழு நம்பிக்கையுடன் இருந்தார்கள். அவருக்கு முட்டை எடுத்தவுடன் எண்ணிக்கையின் தரம் நன்றாக இருந்தது.அது எனக்கு மிகவும் நம்பிக்கையளித்தது.அதனால் அவருக்கு ICSI செய்யப்பட்டது. கரு வைத்தபின் அவருக்கு தேவையான மருந்து கொடுக்கப்பட்டது. இன்று அவர் தாய்மையடைந்து மூன்று மாதங்கள் ஆகின்றன.
தொடர்புக்கு: இந்தியா: 0091 9841620779
இலங்கை 0778978792
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM